உள்ளூர் செய்திகள்

செய்யாறில் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்த போது எடுத்த படம்.

செய்யாறில் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம்

Published On 2023-01-26 15:01 IST   |   Update On 2023-01-26 15:01:00 IST
  • தி.மு.க. சார்பில் நடந்தது
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

செய்யாறு:

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், செய்யாறு திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் செய்யாறு டவுன் மண்டி தெருவில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் கே விஸ்வநாதன் தலைமை வகித்தார். நகர மன்ற தலைவர் ஆ.மோகனவேல், தலைமை செயற்குழு உறுப்பினர் வேல்முருகன், ஏ. என்.சம்பத், செய்யாறு ஒன்றிய செயலாளர் ஞானவேல், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக ஒ.ஜோதி எம்எல்ஏ மற்றும் தலைமை கழக பேச்சாளர் அருளானந்தம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ வ.அன்பழகன், புரிசை சிவக்குமார், ராம் ரவி, வழக்கறிஞர்கள் சான் பாஷா, தினேஷ் குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News