உள்ளூர் செய்திகள்

வீரம்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபா கூட்டத்தில் ஒ.ஜோதி எம்.எல்.ஏ. பங்கேற்று பேசிய காட்சி.

கிராம சபா கூட்டம்

Published On 2022-11-29 14:35 IST   |   Update On 2022-11-29 14:35:00 IST
  • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. பங்கேற்பு
  • ஆயிரம் முருங்கை மரங்களை நட்டு வளர்த்திட முடிவு

செய்யாறு:

செய்யாறு அடுத்த அனக்காவூர் ஒன்றியம், வீரம்பாக்கம் கிராமத்தில் சிறப்பு கிராம சபா கூட்டம் நேற்று நடைபெற்றது.

ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், பிடிஒ ஹரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் இளவேணி வரவேற்றார். ஒ.ஜோதி எம்எல்ஏ கலந்துகொண்டு அரசின் சாதனைகளை கிராம மக்களுக்கு எடுத்துக் கூறினார்.

கூட்டத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கிராமத்தின் அடிப்படை வசதிகள் நிறைவேற்றவும், ஆயிரம் முருங்கை மரங்களை நட்டு வளர்த்திடவும் கிராம சபாவில் தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத்தில் வெம்பாக்கம் சேர்மன் மாமண்டூர் ராஜு, நகர செயலாளர் வக்கீல் விஸ்வநாதன், புரிசை சிவக்குமார், ஒன்றிய செயலாளர் ஞானவேலு உள்ளிட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News