உள்ளூர் செய்திகள்
- பெண்கள், சிறுவர்கள் உள்பட 17 பேர் படுகாயம்
- ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
ஆரணி, ஜூலை.18-
திருவண்ணா மலை மாவட்டம் ஆரணி அருகே அப்ப தாங்கல் கூட்ரோடு அருகில் ஆரணியி லிருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பஸ்கள் சென்னை யிலிருந்து போளுர் நோக்கி வந்த அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துகு ள்ளானது.
இதில் பயணம் செய்த பயணிகள் சிவசங்கரி, அம்பிகா, லட்சுமி, விஜயா, உள்ளிட்ட 5 பெண்களும் முரளிதரன், பாரதிராஜா, ராஜா, கோபி கிருஷ்ணன் உள்ளிட்ட 7 ஆண்களுக்கும் மற்றும் 3சிறுவர்கள் மற்றும் அரசு பஸ் டிரைவர்கள் ராஜேந்திரன், பாஸ்கர் கண்டக்டர்கள் ஆனந்தன், ரஞ்சித் உள்ளிட்ட 17 பேர் படுகாயமடைந்தனர்.
போலீசார் மீட்டு 108 ஆம்பூலன்ஸ் மூலம் ஆரணி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து 17பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.