உள்ளூர் செய்திகள்

போளூர் காமராஜர் கூட்டுறவு நகர வங்கியில் பேரவை கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

கூட்டுறவு வங்கியில் பொதுப் பேரவை கூட்டம்

Published On 2023-03-28 08:47 GMT   |   Update On 2023-03-28 08:47 GMT
  • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
  • உறுப்பினர்கள் பங்கேற்றனர்

போளூர்:

போளூர் காமராஜர் கூட்டுறவு நகர வங்கியில் பொது பேரவை கூட்டம் நேற்று மாலை வங்கி வளாகத்தில் நடைபெற்றது. வங்கி செயலாளர் சார் பதிவாளர் சித்திக் அலி தலைமை வகித்தார். பொது மேலாளர் பி. ராமு முன்னிலை வகித்தார். காசாளர் மோகன் வரவேற்றார். உதவி பொது மேலாளர் பி.கேசவன் தணிக்கை அறிக்கை வாசித்தார்.

இதைத்தொடர்ந்து துணை விதி திருத்தம், பணியாளர்கள் ஓய்வு வயது 58 இல் இருந்து 60ஆக உயர்த்துவது வங்கியின் உத்தேச வரவு செலவு திட்டம் புதிய அங்கத்தினர் சேர்ந்துள்ளதை அங்கீகரித்தல், என பல தீர்மானங்களை நிறைவேற்றினார்.

அங்கத்தினர் எழுப்பிய கேள்விகளுக்கு பொது மேலாளர் ராமு தகுந்த பதில் அளித்தார். முடிவில் அங்கத்தினருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

Tags:    

Similar News