உள்ளூர் செய்திகள்

பொங்கல் சீட்டு நடத்தி பணம் மோசடி

Published On 2023-01-11 14:04 IST   |   Update On 2023-01-11 14:04:00 IST
  • தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
  • போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை

வந்தவாசி:

பொங்கல் சீட்டு நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்த நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்ககோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வந்தவாசி தாசில்தார் அலுவலகம் முன்பு 250-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல கோடி ரூபாய் பணத்தை ஏமாற்றி தலைமறைவான தனியார் நிதி நிறுவன உரிமையாளர் மீதி நடவடிக்கை எடுக்க கோரியும், சொத்துக்களை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தை திரும்ப தர வேண்டும் என்று கூறி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் தாசில்தார் முருகானந்தம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி சீட்டு கட்டி ஏமாந்தவர்களிடம் புகார் மனுக்களை பெற்றுக் கொண்டார்.

இதனால் தாசில்தார் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News