உள்ளூர் செய்திகள்

நிதி சார் கல்வி விழிப்புணர்வு முகாம்

Published On 2022-10-30 13:41 IST   |   Update On 2022-10-30 13:41:00 IST
  • கடனுதவிகள் குறித்து விளக்கினர்
  • சிறு வணிகருக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அடுத்த ஒண்ணுபுரம் கிளை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் நிதிசார் கல்வி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு ஒண்ணுபுரம் கிளை மேலாளர் பாரதி தலைமை தாங்கிகார். காசாளர் அகிலா முன்னிலை வகித்தார்.

கூட்டுறவு வங்கி சார்பில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் கடனுதவிகள் சிறு வணிகக் கடன், மகளிர் குழு கடன் உள்பட பல்வேறு கடனுதவிகள் குறித்து விளக்கிக் கூறினார்.

சிறு வணிகருக்கு ரூ.50 ஆயிரம் ஒரு நபருக்கு வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளி கடன் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது.

இறுதியில் உதவியாளர் நாராயணன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News