உள்ளூர் செய்திகள்

மின் சாரம் தாக்கி மாடு பலியான காட்சி.

மின்சாரம் தாக்கி விவசாயி, மாடு சாவு

Published On 2022-08-26 10:01 GMT   |   Update On 2022-08-26 10:01 GMT
  • வேலை முடிந்து மாலை வீடு திரும்பும் போது பரிதாபம்
  • அறுந்து கிடந்த மின்கம்பியால் விபரீதம்

ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சதுப்பேரி பாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி மணி (வயது 58). இவருக்கு விஜயா என்ற மனைவியும் பரசுராமன் ஜீவரத்தினம் என்ற 2 மகனும் ஜீவஜோதி என்ற மகளும் உள்ளனர்.

மணி தினமும் காலையில் விவசாய நிலத்திற்கு தன்னுடைய மாட்டை அழைத்து கொண்டு மீண்டும் விவசாய வேலை முடிந்து மாலை நேரத்தில் வீடு திரும்புவது வழக்கம்.

இதே போல் நேற்று காலையில் தன்னுடைய விவசாய நிலத்திற்கு மாட்டை அழைத்து கொண்டு விவசாய பணியை முடித்து மீண்டும்வீட்டிற்கு திரும்பினார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு நபரின் விவசாய நிலத்தில் அருகில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழையால் மின்கம்பி அறுந்து கிடந்துள்ளது.

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த மாடு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தது. இதனை கண்ட மணி மாட்டை காப்பாற்ற முயன்ற போது மணி மீது மின்சாரம் பாய்ந்து படுகாயமடைந்தார்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் மணியை மீட்டு தச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்னர் மேல்சி கிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து களம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மின்சார துறையினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News