உள்ளூர் செய்திகள்

சாராய ஊறல் அழிப்பு

Published On 2023-05-02 13:31 IST   |   Update On 2023-05-02 13:31:00 IST
  • 800 லிட்டர் ஊறலும் 30 லிட்டர் சாராயமும் கைப்பற்றப்பட்டது
  • போலீசார் ரோந்து பணியில் சிக்கியது

போளூர்:

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த் திகேயனுக்கு கிடைத்த தகவ லின்படி மாவட்ட அமலாக்க பிரிவு போலீஸ் துணை சூப் பிரண்டு ரமேஷ்ராஜ் அறிவுறுத்தலின்பேரில் போளூர் மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் புனிதா தலை மையில் போலீசார் ஜமுனாம ரத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சிங்கிணறு ஓடை அருகில் சாராயம் காய்ச்சுவதற்கு தேவையான 800 லிட்டர் ஊறலும் 30 லிட் டர் சாராயமும் கைப்பற்றி அழித்தனர்.

மேலும் அரசு மதுபானங் களை கள்ளத்தனமாக விற் பனை செய்த அத்திமலைபட்டை சேர்ந்த சாந்தி மற்றும் மட்டப் பிறையூர் சேர்ந்த முருகேசன் ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமி ருந்து 143 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News