உள்ளூர் செய்திகள்

மரத்தில் வேன் மோதி முதியவர் பலி

Published On 2023-03-23 08:57 GMT   |   Update On 2023-03-23 08:57 GMT
  • 3 பேர் காயம்
  • போலீசார் விசாரணை

செய்யாறு:

செய்யாறு டவுன், டி.எஸ்.பழனிவேல் தெருவை சேர்ந்தவர் நரசிம்மன் (வயது 74). ஓய்வு பெற்ற கோர்ட்டு ஊழியர்.

அதே பகுதியில் வசிக்கும் 12 நபர்களுடன் வேனில் அறுபடைவீடு முருகன் கோவிலுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் சென்று விட்டு அதிகாலை 3.30 மணி அளவில் வந்தவாசி சாலையில் குளமந்தை பஸ் ஸ்டாப் அருகே வந்துகொண்டிருந்தனர்.

அப்போது டிரைவர் தூக்க கலக்கத்தில் சாலை ஓர பனைமரத்தில் வேன் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முன் சீட்டில் இருந்த நரசிம்மன் கண்ணாடி உடைந்து கீழே விழுந்து, பலத்த காயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் வழியிலேயே நரசிம்மன் பரிதாபமாக இறந்தார்.வேனில் இருந்து வேதாச்சலம், வடிவேலன், சின்னம்மா ஆகியோர்க ளுக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் செய்யாறு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து அனக்காவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News