உள்ளூர் செய்திகள்

மாணவர்களின் கணித கற்றல் திறன் குறித்து கல்வி அலுவலர் ஆய்வு

Published On 2022-10-20 14:53 IST   |   Update On 2022-10-20 14:53:00 IST
  • வாய்ப்பாடுகளை வழங்கினார்
  • 30 பேர் பயணடைந்தனர்

சேத்துப்பட்டு:

பெரணமல்லூர் அடுத்த நெடுங்குணம், ஆர்.சி. எம். தொடக்கப்பள்ளியில் பெரணமல்லூர், வட்டார கல்வி அலுவலர் திடீர் ஆய்வு செய்தார்.

மாணவர்களின் கணித கற்றல் திறன் அதிகரிக்க செங்கோணம், குறுங்கோ ணம், விரிகோணம், ஆகியவை குறித்து கணித உபகரணங்கள் மூலம் மாதிரி வகுப்பு எடுத்து மாணவர்களின் கணித கற்றல் திறன் குறித்து வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் மாணவர்களுக்கு மாதிரி வகுப்பு எடுத்தார்.

மேலும் என்னும், எழுத்தும், திட்டம் பயிற்சி ஏடுகள் பராமரிப்பு ஆகியவற்றை ஆய்வு செய்தார். முன்னதாக கணிதத்தில் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாய்ப்பாடு வழங்கினார்.

இதேபோல் மோரக்கணியனூர், ஆர்.சி.எம். தொடக்கப்பள்ளியில் படிக்கும் 30 மாணவ-மாணவிகளுக்கு கணித கற்றல் திறன் அதிகரிக்க வாய்ப்பாடுகளை வழங்கினார்.

Tags:    

Similar News