உள்ளூர் செய்திகள்

தி.மு.க. ஒன்றிய குழு உறுப்பினர் செல்வகுமாரி செந்தில் தனது ராஜினாமா கடிதத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியமூர்த்தி, ஒன்றியக்குழு தலைவர் ராணி அர்ஜுனன், ஆகியோரிடம் கொடுத்த காட்சி.

தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் திடீர் ராஜினாமா

Published On 2022-06-18 09:49 GMT   |   Update On 2022-06-18 09:49 GMT
  • தனது குடும்ப சூழ்நிலை காரணம் என கடிதம்
  • வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கடிதம் வழங்கினார்

சேத்துப்பட்டு :

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம் மண்டகொளத்தூர், ஈயகொளத்தூர், வம்பலூர், ஆகிய 5-வது வார்டு தி.மு.க. ஒன்றிய குழு உறுப்பினர் செல்வகுமாரி செந்தில் இவர் நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தார்.

அப்போது தனது குடும்ப சூழ்நிலை காரணமாக ஒன்றிய குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி ராஜினாமா கடிதத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியமூர்த்தியிடம் வழங்கினார்.

அப்போது ஒன்றியக்குழு தலைவர் ராணி அர்ஜுனன், ஒன்றியக்குழு துணை தலைவர் முருகையன், ஒன்றிய தி.மு.க. செயலாளர் எழில்மாறன், ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் மணிமாறன், மாவட்ட ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் அண்ணாதுரை, ஒன்றிய குழு உறுப்பினர்கள் பிரேமலதா ராஜசிம்மன், சம்பத், சாமுண்டீஸ்வரி குமார், கோவிந்தசாமி, உள்பட உடனிருந்தனர்.

Tags:    

Similar News