உள்ளூர் செய்திகள்

வாகனம் மோதி மாவட்ட கல்வி அலுவலக ஊழியர் பலி

Published On 2022-07-02 14:15 IST   |   Update On 2022-07-02 14:15:00 IST
  • தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
  • மனைவி 2 குழந்தைகள் உள்ளனர்

வெம்பாக்கம், ஜூலை.2-

காஞ்சிபுரம் மாவட்டம் அய்யங்கார் குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய சாரதி (வயது 37). இவர் திருவண்ணாமலை மாவட்ட கல்வி அலுவலகத்தில் தொகுப்பு ஊதிய ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள் உள்ளனர்.

இவர் திருவண்ணாமலை வேலைக்கு சென்று வருவது வழக்கம் இதேபோல் நேற்று காலை பைக்கை அப்துல்லாபுரம் கூட்டு சாலை விட்டு பஸ்ஸில் திருவண்ணாமலைக்கு சென்று இரவு அப்துல்லா புரம் கூட்டு சாலையில் இறங்கி பைக்கை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு அப்துல்லாபுரம் மின்வாரியம் அலுவலகம் எதிரே வந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியது, இதில் விஜயசாரதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார்.

இது குறித்து இவருடைய மனைவி தூசி போலீசில் கொடுத்த புகார் மீது இன்ஸ்பெக்டர் முரளிதரன் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News