உள்ளூர் செய்திகள்

சாமி வீதி உலா நடந்த காட்சி.

ஆரணி நரசிங்க பெருமாள் கோவிலில் 8 லட்சம் தேங்காய் உடைத்து வழிபட்ட பக்தர்கள்

Published On 2022-09-26 15:35 IST   |   Update On 2022-09-26 15:35:00 IST
  • புஷ்ப பல்லக்கு வீதி ஊலா
  • பக்தர்கள் ஏராளமாேனார் தரிசனம்

ஆரணி:

ஆரணி டவுன் சைதாப்பேட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ லட்சுமி நரசிங்க பெருமாள் கோவில் உள்ளது.

இந்தக் கோவிலில் புரட்டாசி மஹாலய அமாவாசை முன்னிட்டு 99 ஆம் ஆண்டு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. நரசிங்க பெருமாளுக்கு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் சாமி அலங்கரிக்கப்பட்டு ஊர்வலம் கமண்டல நாக நதி ஆற்றில் இருந்து மேட்டுத்தெரு நாடக சாலை பற்றி தெரு உள்ளிட்ட பகுதிகளில் மேல வாத்தியங்கள் முழங்க புஷ்ப பல்லுக்கு வீதி உலா நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிநெடுகிளும் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.

இதில் ஆரணி சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் நரசிங்க பெருமாளை வழிபட்டு சென்றனர்.

Tags:    

Similar News