உள்ளூர் செய்திகள்

இந்தி திணிப்பு எதிர்த்து ஆர்ப்பாட்டம்

Published On 2022-10-30 13:44 IST   |   Update On 2022-10-30 13:44:00 IST
  • மத்திய அரசை கண்டித்து நடந்தது
  • நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

செங்கம்:

செங்கத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் புதிய பஸ் நிலையம் எதிரில் இந்தி மொழி திணிப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்தி திணிப்பை எதிர்த்தும், மத்திய அரசை கண்டித்தும் கண்டன உரையாற்றப்பட்டது. மேலும் ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக இந்தி திணிப்பு வேண்டாம் என கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வட்ட செயலாளர் சர்தார், தங்கமணி, அஷ்ரத்அலி உள்பட ஏஐடியுசி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News