உள்ளூர் செய்திகள்

கோவிலில் வகுப்புகள் நடந்த காட்சி.

பழுதடைந்த பள்ளி கட்டிடம் இடிப்பு

Published On 2022-11-09 15:22 IST   |   Update On 2022-11-09 15:22:00 IST
  • கோவிலில் பாடம் கற்கும் மாணவர்கள்
  • பள்ளி கட்டிடத்தை விரைந்து கட்ட ெபற்றோர்கள் வலியுறுத்தல்

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் ஊராட்சி ஒன்றிய இந்து ஆரம்பப்பள்ளியில் உள்ள கட்டிடங்கள் அனைத்தும் பழுதடைந்த நிலையில் இருந்ததால் கடந்த வாரம் இடிக்கும் பணி தொடங்கியது.

தற்போது வகுப்பறைகள் இல்லாத நிலையில் இங்கு படிக்கும் சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு கடந்த 7-ம்தேதி முதல் வகுப்புகள் அருகே உள்ள பெருமாள் கோவிலில் நடத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மாணவ மாணவிகள் 1 முதல் 5 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அருகருகே வகுப்புகள் நடத்தப்பட்டது.

பகலில் அங்கன்வாடி மையத்தில் மாணவ மாணவிகள் மதிய உணவு (பழைய கட்டிடத்தில்) வழங்கப்பட்டது. கண்ணமங்கலம் இந்து ஆரம்பப் பள்ளியை விரைந்து கட்டி முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள், பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News