உள்ளூர் செய்திகள்

விஷம் குடித்து ெபண் சாவு

Published On 2022-06-29 17:30 IST   |   Update On 2022-06-29 17:30:00 IST
  • உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
  • போலீசார் விசாரணை

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அருகே உள்ள படவேடு வேட்டகிரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 30) இவருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 27ம்தேதிமீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதியடைந்தார். இதனால் மன உளைச்சளுக்கு ஆளானார். பின்னர் பயிருக்கு அடிக்க வைத்திருந்தபூச்சி மருந்தை குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். அருகில் இருந்தவர்கள் விஜயலட்சுமியை மீட்டு வேலூர் தனியார் மருத்துவமனையில் கொண்டு போய் சேர்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக சந்தவாசல் போலீசில் பழனி புகார் செய்தார்.

அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News