உள்ளூர் செய்திகள்

தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் பாதியில் திரும்பி செல்லும் பஸ்கள்

Published On 2022-11-07 15:21 IST   |   Update On 2022-11-07 15:21:00 IST
  • கிராம மக்கள், மாணவர்கள் அவதி
  • சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலத்தை அடுத்துள்ள இரும்பிலி கிராமத்திற்கு வேலூரில் இருந்து ரெட்டிபாளையம் கிராமம் வரை டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் இரும்பிலி கிராமம் செல்லும் ரோட்டில் உயரழுத்த மின் கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதனை சீரமைக்க பலமுறை அப்பகுதி மக்கள் புகார் செய்தும் மின் வாரியத்தினர் சீரமைக்காமல் உள்ளனர்.

இதனால் இரும்பிக்கு வரும் பஸ்கள் பாதியிலேயே திரும்பி செல்கிறது. இரும்பிலி கிராமத்தில் இருந்து பொதுமக்கள், மாணவ, மாணவிகள் வெளிபகுதிகளுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே தாழ்வான நிலையில் செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News