உள்ளூர் செய்திகள்

கல்லூரி மாணவி மாயம்

Published On 2023-05-13 12:32 IST   |   Update On 2023-05-13 12:32:00 IST
  • கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

செய்யாறு:

செய்யாறு பகுதியை சேர்ந்த 18 வயது மாணவி, அதே பகுதியில் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர் கடந்த 10-ந் தேதி கல்லூரிக்கு சென்று விட்டு வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றார். வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடமும், உறவினர்கள் வீடுகளிலும் தேடி உள்ளனர்.

கல்லூரி மாணவி கிடைக்காததால் இது குறித்து செய்யாறு டவுன் போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News