உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

தூய்மைப் பணி விழிப்புணர்வு ஊர்வலம்

Published On 2022-07-14 13:56 IST   |   Update On 2022-07-14 13:56:00 IST
  • சிறப்பு கண்காட்சியை மாணவிகள் பார்வையிட்டனர்
  • ஏராளமாேனார் கலந்து கொண்டனர்.

போளூர்:

போளூர் பேரூராட்சி சார்பில் தூய்மை பணி வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

போளூர் பேரூராட்சியில் செயற்பொறியாளர் வைத்திலிங்கம் தலைமை தாங்கினார். பேரூராட்சியின் செயலாளர் முகமது ரிஜ்வான் அனைவரையும் வரவேற்றார். போளூர் பேரூராட்சியின் தலைவர் ராணி சண்முகம் கொடி அசைத்து விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

இந்தத் தூய்மை பணி ரத ஊர்வலம் போளூர் முக்கிய வீதிகள் வழியாக பஜார் வீதி செந்தாரப்பட்டி தெரு பஸ் நிலையம் போன்ற வழியாக சென்று அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அடைந்தது.

பின்னர் பேரூராட்சியின் திட்டக் குழு மேலாண்மை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு கண்காட்சி போளூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பார்வையிட்டனர்.

இதில் பேரூராட்சி மன்ற தலைவர் தூய்மைப்பணி குறித்து மாணவிகளுக்கு எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுதா, போளூர் பேரூராட்சியின் துணைத் தலைவர் சாந்தி நடராஜன், மல்லிகா கிருஷ்ணமூர்த்தி, ஜோதி குமரன், ரங்கதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News