உள்ளூர் செய்திகள்

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

Published On 2022-11-11 15:00 IST   |   Update On 2022-11-11 15:00:00 IST
  • வேலூரை சேர்ந்தவர்
  • போலீசார் விசாரணை

கண்ணமங்கலம்:

சந்தவாசல் அருகே உள்ள வெள்ளூர் கிராமத்தில் வசிக்கும் 17 வயது சிறுமியை வேலூர் ஆர்.என்.பாளையம் பகுதியை சேர்ந்த கஜேந்திரன் (29) திருமணம் செய்துள்ளார்.

இது குறித்து சந்தவாசல் போலீசாருக்கு தகவல் தெரியவந்தது. தகவலின் பேரில் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் கஜேந்திரன் சிறுமியை திருமணம் செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து கஜேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்து காவலில் வைத்தனர். மேலும் மீட்கப்பட்ட சிறுமியை போலீசார் பெண்கள் பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News