உள்ளூர் செய்திகள்

வந்தவாசியில் பா.ஜ.க.வினர் மறியல் செய்தனர்.

வந்தவாசி, கண்ணமங்கலத்தில் பா.ஜ.க. ஆர்பாட்டம்

Published On 2022-11-02 08:05 GMT   |   Update On 2022-11-02 08:05 GMT
  • அண்ணாமலையை கைது செய்ததை கண்டித்து நடந்தது
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

கண்ணமங்கலம்:

சென்னையில் போராட்டம் நடத்திய பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையை நேற்று போலீசார் கைது செய்தனர்.

இதனை கண்டித்து கண்ணமங்கலம் புதிய பஸ் நிலையத்தில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பாஜக இளைஞரணி செயலாளர் திருஞானசம்மந்தம் தலைமையில், பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் நகர பாஜக தலைவர் முத்துவேல், ஒன்றிய துணைத் தலைவர்கள் பரணி ஆனந்தன், அருளப்பன், நிர்வாகிகள் பன்னீர் பாலாஜி, மூர்த்தி, சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தேரடி பகுதியில் பா.ஜ.க. நகர தலைவர் சுரேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர் ஆர்பாட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் முத்துசாமி, துரைநா டார், மாவட்டச் செயலாளர் குருலிங்கம், ஒன்றிய செயலாளர்கள் நவநீதன், சித்தரவேலு, நகரத் துணை தலைவர் சதீஷ், மணிகண்டன், குணா, தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News