உள்ளூர் செய்திகள்

நிழற்கூடம் அமைக்க பூமி பூஜை

Published On 2023-04-13 14:30 IST   |   Update On 2023-04-13 14:30:00 IST
  • ரூ.28 லட்சம் ஒதுக்கீடு
  • ஏராளமாேனார் கலந்துகொண்டனர்

போளூர்:

திருவண்ணாமலையில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் உள்ள முக்கிய ஊர் கேளூர் ஆகும்.

சனிக்கிழமை தோரும் இங்கு நடக்கும் மாட்டு சந்தை மாவட்டத்தில் பிரசித்தி பெற்றதாகும். போளூர் ஒன்றியத்திற்குட்பட்ட இந்த கேளூரை சுற்றி சுமார் 20 கிராமங்கள் உள்ளன.

இவர்கள் அனைவரும் வேலூர் திருவண்ணாமலை செல்வது என்றால் கேளூர் வந்து தான் செல்ல வேண்டும்.

இதுவரை கேளூர் பஸ் நிலையத்தில் பயணிகள் அமர்வதற்கு நின்று பஸ் ஏறுவதற்கு ஒரு நிழற்கூடம் கூட இல்லை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கேளூர் பஸ் நிலையத்தில் நிழற்கூடம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

அந்த கோரிக்கைகளை ஏற்று போளூர் ஒன்றியத்தின் சார்பில் நேற்று ரூ.28 லட்சம் ஒதுக்கப்பட்டு போளூர் ஒன்றிய குழ தலைவர் சாந்தி பெருமாள் தலைமையில் பூமி பூஜை நடந்தது.

உடன் முன்னாள் ஒன்றிய குழ தலைவர் சுப்பிரமணி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News