உள்ளூர் செய்திகள்

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சுற்று சுவர் அமைக்க பூமி பூஜை

Published On 2022-09-29 14:48 IST   |   Update On 2022-09-29 14:48:00 IST
  • ரூ.1.94 கோடியில் கட்டப்படுகிறது
  • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

செய்யாறு:

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் ஆற்காடு சாலையில் இயங்கி வரும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ரூ.1.94 கோடியில் சுற்றுச்சுவர் கட்டுவதற்கான பூமி பூஜை விழா நடந்தது.

நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய ஒ.ஜோதி எம்.எல்.ஏ. சுற்றுச்சுவர் கட்டுவதற்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் ஆ.மோகனவேல், நகர திமுக செயலாளர் கே.விஸ்வநாதன், ஒன்றிய கவுன்சிலர்கள் பாலகோபால், ஏ.ஞானவேல், உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News