உள்ளூர் செய்திகள்
ரூ.2 கோடியில் தார் சாலை அமைக்க பூமி பூஜை
- ஓ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் தாலுக்கா, பெருமாந்தாங்கல் -வடமணபாக்கம் இடையே ரூ.2 கோடி மதிப்பில் புதிய தார் சாலை போடுவதற்கு பூமி பூஜை நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வெம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் டி.ராஜு தலைமை தாங்கினார்.
மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக ஒ.ஜோதி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு புதிய தார் சாலை போடும் பணியினை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்து பேசினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர்கள் நாவல்பாக்கம் வி. பாபு, திலகவதி ராஜ்குமார், திமுக நகர செயலாளர் கே.விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர்கள் ஜே. சி.கே. சீனிவாசன், எம். தினகரன், என். சங்கர், ஏ.ஞானவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.