உள்ளூர் செய்திகள்

திருமணம் நிச்சயித்த இளம்பெண் திடீர் மாயம்

Published On 2023-04-10 09:40 GMT   |   Update On 2023-04-10 09:40 GMT
  • வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை
  • போலீசார் விசாரணை

செய்யாறு:

வெம்பாக்கம் பகுதியை சேர்ந்த 29 வயதுடைய பெண் சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

இவருக்கு செய்யாறு பகுதியை சேர்ந்த வாலிபருடன் கடந்த மாதம் 10-ந் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்த நிலையில் இளம்பெண் கடந்த 1-ந்தேதி வேலைக்கு சென்று வருவதாக அதிகாலை சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் பெண்ணின் தம்பி இளம்பெண்ணை உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடி உள்ளனர்.

இளம் பெண் கிடைக்காததால் இது குறித்து பிரம்மதேசம் போலீசில் பெண்ணின் தம்பி புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இளம் பெண்ணை ஆசைவார்த்தை கூறி யாராவது கடத்திச் சென்றனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News