உள்ளூர் செய்திகள்
- தபால் நிலைத்தில் பணிபுரிந்து வந்தார்
- போலீசார் விசாரணை
வந்தவாசி:
வந்தவாசி வீராசாமி முதலியார் தெருவை சேர்ந்தவர் துரைராஜ். இவர் வந்தவாசி தபால் நிலையத்தில் இரவு நேர காவலா ளியாக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் இவரது நண்பரான செல்வராஜ் என்பவருடன் நேற்று இரவு துரைராஜ் பைக்கில் ஆராசூர் கிராமம் அருகே வந்து கொண்டிருந்தார்.
அப்போது நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில் துரைராஜுவும், செல்வ ராஜும் படுகாயமடைந்தனர்.
அந்த வழியே சென்றவர்கள் இவர்களை மீட்டு வந்தவாசி அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர் துரைராஜ் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
மேலும் படுகாயம் அடைந்த செல்வராஜுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வந்தவாசி வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.