உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலை தபால் அலுவலகத்தில் பென்சன் அதாலத்

Published On 2022-06-22 16:15 IST   |   Update On 2022-06-22 16:15:00 IST
  • வருகிற 28-ந் தேதி நடக்கிறது.
  • கோட்ட கண்காணிப்பாளர் அறிவிப்பு.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை தபால் கோட்டத்தில் 2022-ம் ஆண்டின் முதலாவது பென்சன் அதாலத் என்னும் தபால் பென்சன் தாரர்கள் குறைகளையும் வகையில் நேர்காணல் கூட்டம் திருவண்ணாமலை தபால் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வரும் ஜூன் 28-ந்தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளன.

எனவே தபால் பென்சன் தாரர்கள் தங்கள் குறைகளை தபால் கோட்ட கண்காணிப்பாளருக்கு வரும் 24ந் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைத்தாள் அதனை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தபால் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News