உள்ளூர் செய்திகள்

உபரி உணவை வீணாக்காமல் பகிர்வோம் திட்டத்தின் விழிப்புணர்வு வாகனம்

Published On 2022-06-21 16:04 IST   |   Update On 2022-06-21 16:04:00 IST
  • 15 நாட்கள் செயல்பாட்டில் இருக்கும்
  • திருவண்ணாமலை கலெக்டர் தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் மூலம் உபரி உணவை வீணாக்காமல் பகிர்வோம் திட்டத்தின் பிரத்யேகமான விழிப்புணர்வு வாகனம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேலும் கைப்படாத உணவு 50 பேருக்கு மேல் இருந்தால் தொடர்பு கொள்வதற்கு 9087711112 என்ற தொலைபேசி எண்ணை அறிமுகம் செய்தார். பின்னர் அவர் கூறுகையில் உணவகங்கள் விற்பனை செய்தது போக மற்றும் திருமண மண்டபம், சமுதாயக் கூடம், வீடுகளில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் தயாரிக்கும் உணவுகளில் மீதமுள்ள 50 பேருக்கு மேல் உட்கொள்ளும் தன்மையுள்ள உணவினை இந்த எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

உணவினை பெற்று தேவைப்படும் நபர்களுக்கு தொண்டு நிறுவனம் மூலம் நேரடியாக அளிக்கப்படும். மேலும் உணவு பாதுகாப்பிற்கான உறுதி செய்யும் வகையில் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் திருவண்ணாலை மாவட்டத்தில் 15 நாட்கள் செயல்பாட்டில் இருக்கும் என்றார்.

முன்னதாக நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனத்தின் செயல்பாடுகள் குறித்து அவர் ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, திருவ ண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல், உணவு பாதுகாப்பு த்துறை நியமன அலுவலர் ராமகிருஷ்ணன், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் எழில்சிக்கயராஜா, கலைஷ்குமார் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News