உள்ளூர் செய்திகள்

பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நடந்த காட்சி.

பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு

Published On 2022-07-03 09:08 GMT   |   Update On 2022-07-03 09:08 GMT
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
  • குப்பைகளை தரம் பிரித்து தர வலியுறுத்தல்

வந்தவாசி:

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது பேரணியை சென்னாவரம் ஊராட்சி மன்ற தலைவர் வீரராகவன் தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற பேரணியில் தூய்மை பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு சென்னாவரம் கிராமத்தில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்று தேவையற்ற பிளாஸ்டிக் உபயோகிக்க கூடாது துணிப்பை மட்டும் உபயோகிக்க வேண்டும் மற்றும் மக்கும் குப்பை மக்காத குப்பைகளாக தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.

இந்த பேரணியில் வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள் தூய்மை பணியாளர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News