உள்ளூர் செய்திகள்

ஆணை வழங்கிய போது எடுத்த படம்.

கலசப்பாக்கம் அரவிந்தர் வேளாண்மை தொழில்நுட்பக் கல்லூரியில் நேர்முக வளாகத் தேர்வு

Published On 2022-07-05 13:54 IST   |   Update On 2022-07-05 13:54:00 IST
  • 40 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது
  • 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அடுத்த கலசப்பாக்கம் அரவிந்தர் வேளாண்மை தொழில்நுட்ப கல்லூரியில் படிக்கும் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஹைதராபாத் பிரபல முன்னணி தனியார் நிறுவனமான விதை உற்பத்தி மற்றும் இயற்கை உரங்கள் பூச்சிக்கல்லு மருந்துகள் தயாரிக்கும் நிறுவனமான மகா அக்சயா சீட்ஸ் சார்பில் நேற்று நேர்முக வளாக தேர்வு நடத்தப்பட்டது.

இதில் இறுதி ஆண்டு படிக்கும் சுமார் 100 மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நேர்முகத் தேர்வில் உடனடியாக 40 பேருக்கு பணி நியமன ஆணையை ஹைதராபாத் மகா அக்ஷயா சீட்ஸ் நிறுவன அதிகாரிகள் வழங்கினார்/

அப்போது அரவிந்தர் வேளாண்மை தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் கிருஷ்ணவேணி உடன் இருந்தனர்.

Tags:    

Similar News