கார் - வேன் மோதியதில் மேலும் ஒரு பெண் பக்தர் பலி
- சித்ரா பவுர்ணமியொட்டி திருவண்ணாமலை கிரிவலத்திற்கு சென்றனர்
- போலீசார் விசாரணை
ஆரணி:
ஆந்திர மாநிலம் காள காளஹஸ்தியை சேர்ந்தவர்கள் தயா சேகர் ரெட்டி, டாக்டர் சூரிய சேகர் ரெட்டி, மோனிகா, மதுமிதா இவர்கள் அனைவரும் சித்ரா பவுர்ணமியொட்டி திருவண்ணாமலை கிரிவலத்திற்கு சென்றனர்.
கிரிவலம் முடிந்து சொந்த ஊருக்கு காரில் புறப்பட்டு வந்தனர். வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் பாக்கம் கிராமத்தில் இருந்து 20 பேர் கொண்ட ஆன்மீக குழு திருவண்ணாமலைக்கு அ ன் ன தான ம் வழங்குவதற்காக வேனில் சென்றனர்.
வண்ணாங்குளம் அருகே வந்தபோது கார்- வேன் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரில் பயணம் செய்த தயா சேகர் ரெட்டி மற்றும் டாக்டர் சூரியசேகர்ரெட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
பெண் பலி
இதில் படுகாயம் அடைந்த மோனிகா, மதுமிதாவை மீட்டு அடுக்கம் பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேல் சிகிச்சைக்காக மோனிகாவை வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மோனிகா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
மதுமிதா சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக கண்ணமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.