உள்ளூர் செய்திகள்

வெள்ளி கற்பக விருச்சக வாகனத்தில் நேற்று இரவு அண்ணாமலையார் பவனி வந்த போது எடுத்த படம்.

கண்ணாடி ரிஷப வாகனத்தில் அண்ணாமலையார் வீதி உலா

Published On 2022-12-01 09:52 GMT   |   Update On 2022-12-01 09:52 GMT
  • கார்த்திகை தீப 5-வது நாள் விழா நடந்தது
  • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ேகாவிலில் கார்த்திகை தீப திருவிழா நடந்து வருகிறது.

5-வது நாளான இன்று காலை மூஷிக வாகனத்தில் விநாயகர் கண்ணாடி ரிஷப வாகனத்தில் அண்ணாம லையார் எழுந்தருளி மாடவீதியில் உலா வந்தார். இரவு பஞ்ச மூர்த்திகள் வெள்ளி மூஷிகம் வெள்ளி மயில் வெள்ளி பெரிய ரிஷப வாகனத்தில் அண்ணாம லையார் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.

நேற்று நான்காம் நாள் இரவு பஞ்ச மூர்த்திகள் வெள்ளி கற்பகவிருட்சகம், வெள்ளி காமதேனு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெற்றது.

விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News