உள்ளூர் செய்திகள்

இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசம்

Published On 2022-11-04 15:13 IST   |   Update On 2022-11-04 15:13:00 IST
  • வாலிபர் கைது
  • போலீசார் விசாரணை

திருவண்ணாமலை:

கீழ்பென்னாத்தூர் அடுத்த பூதமங்கலம் கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் திருவண்ணாமலை அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 23 வயதுடைய பட்டதாரி இளம்பெண்ணை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்து உள்ளார்.

அப்போது அவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த இளம்பெண்ணுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்வதற்காக ஏற்பாடு நடந்து உள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் வாலிபரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு அவர் உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறி தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்து உள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News