உள்ளூர் செய்திகள்

செங்கத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்பாட்டம்

Published On 2022-12-15 09:54 GMT   |   Update On 2022-12-15 09:54 GMT
  • சொத்து வரி உயர்வை கண்டித்து நடந்தது
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

செங்கம்:

செங்கம் அருகே உள்ள புதுப்பாளையத்தில் கலசப்பாக்கம் தொகுதி அ.தி.மு.க. சார்பில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னால் எம்.எல்.ஏ. வி.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.

முன்னாள் எம்.எல்.ஏ. செங்கம் நளினிமனோகரன், ஒன்றிய செயலாளர்கள் பொய்யாமொழி, ஆலத்தூர்.கே.மூர்த்தி, காரப்பட்டு ஏ.ரமேஷ், ஜமுனாமரத்தூர் வெள்ளையன், போளூர் வடக்கு ஒன்றியம் அன்பழகன், புதுப்பாளையம் பேரூர் கழக செயலாளர் பி.எஸ்.ராதா உள்பட சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News