உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

ஜவ்வாதுமலையில் 7-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர்

Published On 2022-06-09 14:39 IST   |   Update On 2022-06-09 14:39:00 IST
  • 14 வயது சிறுமி கர்ப்பம்.
  • போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு. போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு. போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு. போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 21). இவர் அதே பகுதியை சேர்ந்த 7-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளது. சிறுமியை சிகிச்சைக்காக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனர்.

அப்போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியை மீட்டு திருவண்ணாமலையில் உள்ள வரவேற்பு இல்லத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்து போளூர் அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் ராஜேஷை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News