உள்ளூர் செய்திகள்

கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

Published On 2023-03-17 10:10 GMT   |   Update On 2023-03-17 10:10 GMT
  • கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு
  • உதவி கலெக்டர் விசாரணை

கண்ணமங்கலம்:

கண்ணமாலம் அடுத்த புதூர் கொல்ல மேடு பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி கவிதா (வயது 28). இவளுக்கு கவின் (2½)என்ற மகன் உள்ளார்.

கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கவிதா கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கவிதாவின் தாயார் அம்பிகா கண்ணமங்கலம் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கவிதாவுக்கு திருமணம் ஆகி இரண்டரை ஆண்டுகளே ஆவதால் வேலூர் ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News