உள்ளூர் செய்திகள்

வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

Published On 2023-01-04 14:07 IST   |   Update On 2023-01-04 14:07:00 IST
  • சண்டை விலக்க சென்றதால் ஆத்திரம்
  • போலீசார் விசாரனை

செய்யாறு:

செய்யாறு டவுன், கிரிதரன் பேட்டை, செல்வ விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த வேலாயுதம் மகன் கிஷோர் குமார் (வயது 20). தனியார் கல்லூரியில் பிசிஏ படித்து வருகிறார்.

இவரது நண்பர் சல்மான் என்பவருக்கும் அதே தெருவில் வசிக்கும் ரஞ்சித் (26) என்பவருக்கும் கடந்த 1-ந்தேதி வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது கிஷோர் குமார் சண்டை வேண்டாம் என்று விலக்கி விட்டுள்ளார்.

அன்று இரவு 7 மணி அளவில் ரஞ்சித் விறகு கட்டையுடன் கிஷோர் வீட்டுக்கு சென்று நீ யாருடா சண்டை விலக்கி விட என்று கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டியும், விறகு கட்டியாலே உன்னை கொலை செய்யாமல் விடமாட்டேன் என்று மிரட்டினார்.

இதுகுறித்து கிஷோர் குமார் செய்யாறு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் மோகன் வழக்கு பதிவு செய்து ரஞ்சித்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News