கோப்புபடம்
ஆடு மேய்க்கும் தொழிலாளி குட்டை நீரில் மூழ்கி பலி
- செய்யாறு அருகே பரிதாபம்
- போலீஸ் விசாரணை
செய்யாறு:
செய்யார் அருகே உள்ள புளியரம்பாக்கம் கிராமம், கொல்லைமேடு பகுதியை சேர்ந்த லட்சுமணன் (வயது 30). ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு அஞ்சலி வயது 21,மனைவியும், கிருத்திகா (வயது 4) பெண் குழந்தையும் உள்ளனர்.
இவர் வழக்கம் போல நேற்று ஆடு மேய்க்க சென்றார். பகல் 2 மணி அளவில் விண்ணவாடி காட்டுப் பகுதியில் உள்ள குட்டையில் குளித்துக் கொண்டு இருந்தார். அதனை அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் மற்றும் திருப்பதி ஆகியோர்களின் பார்த்துள்ளனர்.
சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்த வழியாக வந்த அவர்கள் பார்த்தபோது லட்சுமனின் துணி மட்டும் கரையில் இருந்தது லட்சுமணனை காணவில்லை. குட்டையில் மூழ்கி இருந்த லட்சுமணனை திருப்பதி மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு பரிசோதித்து டாக்டர் ஏற்கனவே லட்சுமணன் இறந்து விட்டதாக கூறியுள்ளார். இது குறித்து அஞ்சலி செய்யாறு காவல் நிலையத்தில் புகார் செய்தார். சப்- இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.