உள்ளூர் செய்திகள்

மலையில் பற்றி எரிந்த தீ

Published On 2023-03-30 14:25 IST   |   Update On 2023-03-30 14:25:00 IST
  • மரங்கள் எரிந்து நாசம்
  • தீயணைப்பு வீரர்கள் வரவில்லை என புகார்

சேத்துப்பட்டு:

சேத்துப்பட்டு தாலுகாவில் உள்ள தேவிகாபுரத்தில் கனக கிரீஸ்வரர் கோவில் மலையில் உள்ளது. இங்குள்ள பெரியநா யகி தாயார் கோவில் பங்குனி உத்திர திருவிழா நடந்து வருகிறது.

இந்த நிலையில் மலை மீது உள்ள கனககிரீஸ்வரர் கோவில் பின்புறத்தில் மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இந்த தீயில் மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து நாசமானது.

அதிகாரிகளும், தீயணைப்பு வீரர்களும் வராததால் மரங்கள் எரிந்து நாசமானதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News