உள்ளூர் செய்திகள்

ஆரணியில் விவசாயிகள் பேரணியாக சென்ற காட்சி.

நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் எடை போட கிலோவுக்கு 1 ரூபாய் லஞ்சம் வசூல்

Published On 2023-03-20 09:54 GMT   |   Update On 2023-03-20 09:54 GMT
  • விவசாயிகள் குற்றச்சாட்டு
  • 15 கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடந்தது

ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுனில் தமிழ்நாடு தேசிய பசுமை புரட்சி புயல் விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் மாநில தலைவர் விஜயகீர்த்தி தலைமையில் 15 கோரிக்கை வலியுறுத்தி பேரணி நடைபெற்றது.

இந்த பேரணி அண்ணா சிலை, காந்தி ரோடு, மார்க்கெட் ரோடு, பழைய பஸ் நிலையம், ஆற்றுபாலம் வழியாக சென்று மா மரம் பஸ் நிறுத்தத்தில் முடிவடைந்தது.

கூட்டுறவு சங்கத்தின் கடன் தவனை நீட்டிக்க வேண்டும். நேரடி கொள்முதல் நிலையம் இல்லாத ஊர்களில் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். விவசாயிகளுக்கு உரத்தை வேளாண்மை கூட்டுறவு மூலம் விற்பனை செய்ய வேண்டும் . கரும்பு டன்னுக்கு 6000 ரூபாய் ஆக உயர்த்தி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைககளை வலியுறுத்தினர்.

நெல் கொள்முதல் நிலையங்களில் 1 கிலோவிற்கு 1 ரூபாய் கட்டாயம் விவசாயிகளிடம் லஞ்சம் வாங்குகின்றனர். இதனை அதிகாரிகள் தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 15 கோரிக்கை வலியுறுத்தி பதாகைகள் ஏந்தியும் கோஷமிட்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் அரிகிருஷ்ணன், மாநில பொருளாளர் அரிகிருஷ்ணன், திருவண்ணாமலை மாவட்ட தலைவர் சின்னசாமி, மாவட்ட செயலாளர் பெருமாள் மாவட்ட பொருளாளர் வேலு, ஆரணி வட்டார தலைவர் வேலப்பாடி கோபி, நெசல் கிளைத் தலைவர் மணிவண்ணன், கிளைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி கிளைச் செயலாளர்கள் வெற்றி வேந்தன் வெங்கடேசன் சக்திவேல் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News