உள்ளூர் செய்திகள்

13 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஆட்டை விழுங்கியது

Published On 2022-10-14 15:42 IST   |   Update On 2022-10-14 15:42:00 IST
  • வனத்துறையினர் பிடித்து காட்டில் விட்டனர்
  • கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அடுத்த குப்பம் மலையடிவாரத்தில் 13 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஆட்டுக்குட்டியை விழுங்கி மயங்கி கிடந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த சந்தவாசல் வனத்துறையினர் சக்திவேல் தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மலைப்பாம்பை பிடித்து இரும்பிலி ஆணைக்கல் காப்புக் காட்டில் கொண்டு போய் விட்டனர். இதனால் அப்பகுதி கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Tags:    

Similar News