வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மின்கலன் வாகன சாவியை தூய்மைப் பணியாளரிடம் எஸ்.அம்பேத்குமார் எம்.எல்.ஏ. வழங்கிய காட்சி.
26 ஊராட்சிகளில் குப்பைகளை அகற்ற ரூ.82 லட்சத்தில் மின்கலன் வாகனங்கள்
- வந்தவாசி எம்.எல்.ஏ. வழங்கினார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வந்தவாசி:
வந்தவாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட 26 ஊராட்சிகளில் குப்பைகளை அகற்ற ரூ.82 லட்சம் மதிப்பில் 33 மின்கலன் வாகனங்கள் நேற்று வழங்கப்பட்டன.
வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மருதாடு, வழூர் அகரம், வெளியம்பாக்கம், அத்திப்பாக்கம் உள்ளிட்ட 26 ஊராட்சிகளுக்கு மொத்தம் 33 மின்கலன் வாகனங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு வந்தவாசி ஒன்றியக்குழுத் தலைவர் எ.ஜெயமணி ஆறுமுகம் தலைமை வகித்தார். திமுக மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர் ந.ராஜன்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வந்தவாசி எஸ்.அம்பேத்குமார் எம்.எல்.ஏ. மின்கலன் வாகன சாவியை ஊராட்சி நிர்வாகிகள் மற்றும் தூய்மைப் பணியாளர்களிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஊராட்சி தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.