உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்

ஸ்பீக்கர் பாக்ஸ் சரிந்து விழுந்து 3 மாத பெண் குழந்தை சாவு

Published On 2022-06-12 13:59 IST   |   Update On 2022-06-12 13:59:00 IST
  • பரண் மீதிருந்த ஸ்பீக்கர் பாக்ஸ் குழந்தையின் தலையில் விழுந்தது.
  • போலீசார் விசாரணை

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அடுத்த சீலபந்தல் ஊராட்சிக்குஉட்பட்ட பிச்சானந்தல் பகுதியை சேர்ந்தவர் விஜய் கூலி தொழிலாளி.

இவருக்கு 3 மாத பெண் குழந்தை உள்ளது நேற்று முன்தினம் மாலை குழந்தையை வீட்டில் தரையில் படுக்க வைத்து இருந்தார். அப்போது வீட்டின் பரணில் உள்ள ஸ்பீக்கர் பாக்ஸ் எதிர்பாராவிதமாக சரிந்து தரையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் தலையில் விழுந்தது.

இதில் குழந்தைக்கு படுகாயம் ஏற்பட்டது. திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று குழந்தை பரிதாபமாக இறந்தது. இச்சம்பவம் குறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News