உள்ளூர் செய்திகள்

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 28-வது பொது பேரவை கூட்டம்

Published On 2022-10-01 09:10 GMT   |   Update On 2022-10-01 09:10 GMT
  • 2022-2023 ஆண்டுக்கான வரவு செலவு குறித்து பேச்சு
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 28-வது பொது பேரவை கூட்டம் திருவண்ணாமலை வேங்கிகால் குமரன் மஹாலில் நடைபெற்றது.

வங்கியின் இணைப்ப திவாளர் மேலாண் இயக்குனர் ஜெயம் வரவேற்றார். வங்கியின் நிர்வாக குழு தலைவர் பெருமாள் நகர் ராஜன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வங்கியின் நிர்வாக குழு இயக்குனர்கள் பேரவை உறுப்பினர்கள், இணைப்பு சங்கங்களின் செயலா ளர்கள் பங்கேற்றனர்.

பொது மேலாளர் (பொறுப்பு). விஜயகுமார் வங்கியின் 2021-2022 நிதி நிலை ஆண்டுக்கான தணிக்கை அறிக்கைப்படி வரவு, செலவு, லாப நட்ட கணக்கு ஆஸ்தி பொறுப்பு பட்டியல். வாசித்தார்.

மேலும் 2022-2023 ஆண்டுக்கான உத்தேச வரவு செலவு மற்றும் ஈட்டக்கூடிய லாபம் குறித்து பேசப்பட்டது.

கூட்டத்தில் திருவண்ணாமலை மற்றும் செய்யாறு சரக துணை பதிவாளர்கள் ராஜசேகரன், கமல கண்ணன், துணைப் பதிவாளர் பொது விநியோகத் திட்டம், ஆரோக்கியராஜ் மற்றும் நிர்வாக குழு தலைவர் அவர்களால் பேரவை வாழ்த்தப்பட்டது நிறைவாக இளங்கோவன் உதவி பொதுமேலாளர் (கடன்) நன்றி தெரிவித்தார்.

Tags:    

Similar News