உள்ளூர் செய்திகள்
துணை மின் நிலையத்தில் ரூ.2 கோடியில் 25 மெகாவாட் மின்மாற்றி
- ஓ.ஜோதி எம்.எல்.ஏ. பங்கேற்பு
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வெம்பாக்கம்:
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா அழிஞ்சில் பட்டு துணை மின் நிலையத்தில் 2 கோடி மதிப்பீட்டில் 25 மெகாவாட் மின்மாற்றியை சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் செய்யாறு ஜோதி எம்.எல்.ஏ. பங்கேற்றார். உடன் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், வெம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் மாமண்டூர் டி,ராஜு, வெம்பாக்கம் ஒன்றிய குழு துணை தலைவர் நாகம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.