உள்ளூர் செய்திகள்

மூதாட்டியிடம் 21 பவுன் செயின் பறிப்பு

Published On 2022-11-20 14:23 IST   |   Update On 2022-11-20 14:23:00 IST
  • பைக்கில் வந்து துணிகரம்
  • சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை வைத்து விசாரணை

ஆரணி:

ஆரணி அடுத்த கொசப்பாளையத்தில் ஈஸ்வரி (வயது 60). நாட்டு மருந்து கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு ஈஸ்வரி ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்று கொண்டி ருந்தார். வீட்டின் அருகில் செல்லும்போது இவரை பின் தொடர்ந்து மோட்டார்சைக் கிளில் வந்த 2 மர்ம நபர்கள் முன்பாக சென்று பின்னர் அவருக்கு எதிரே வந்து ஈஸ்வ ரியின் கழுத்தில் அணிந்து இருந்த 21 பவுன் செயினை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து ஆரணி டவுன் போலீசில் ஈஸ்வரி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பு.புகழ், சப்-இன்ஸ் பெக்டர்கள் சுந்தரேசன், கிருஷ்ணமூர்த்தி, மகேந்திரன் உள்பட போலீசார் விரைந்து வந்து இரவு முழுவதும் மர்ம நபர்களை தேடினர். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை.

மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News