உள்ளூர் செய்திகள்

100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் மறியல்

Published On 2022-10-23 14:35 IST   |   Update On 2022-10-23 14:35:00 IST
  • போக்குவரத்து பாதிப்பு
  • ஊராட்சி மன்ற தலைவர் பேச்சுவார்த்தை

கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அடுத்த ராமசாணிக்குப்பம் ஊராட்சியில் 100 நாள் திட்டத்தின் கீழ் போதிய பணி, சம்பளம் வழங்காததை கண்டித்து மார்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாலசுந்தரம், ஆதிகேசவன் ஆகியோர் தலைமையில் முற்றுகை, மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, மேற்கு ஆரணி ஒன்றிய பணி மேற்பார்வையாளர், ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரிபார்த்தீபன் ஆகியோர் வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.இதனால் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News