உள்ளூர் செய்திகள்

வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியா் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த காட்சி.

சிவன்மலை முருகன் கோவிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு

Published On 2023-11-14 16:14 IST   |   Update On 2023-11-14 16:14:00 IST
  • இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது
  • இம்மாதத்துக்கு துலா மாதம் என்ற பெயரும் உண்டு.

காங்கயம்: 

வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. மேலும், ஐப்பசி மாதம் ஐஸ்வா்யங்களை அள்ளித் தரும் மாதம் என்பது பக்தா்களின் நம்பிக்கை. இம்மாதத்துக்கு துலா மாதம் என்ற பெயரும் உண்டு.

இந்நிலையில் சிவன்மலை முருகன் கோவிலில் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு முதல் பூஜையாக கோமாதா பூஜை நடைபெற்றது. பின்னா் காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு பூஜையும் நடைபெற்றன.

மதியம் 12 மணிக்கு சிவன்மலை முருகரான சுப்பிரமணிய சுவாமியும், வள்ளி, தெய்வானையும் சிறப்பு அலங்காரத்தில் உள்பிரகாரத்தை சுற்றி வலம் வந்து, பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். தொடா்ந்து உச்சிகால பூஜை நடைபெற்றது. தீபாவளியை தொடா்ந்து திங்கள்கிழமையும் விடுமுறை என்பதால் பக்தா்கள் அதிக அளவில் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

Tags:    

Similar News