உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

பள்ளி மாணவா்களுக்கு யோகாசன பயிற்சி

Published On 2023-06-21 10:08 GMT   |   Update On 2023-06-21 10:08 GMT
  • திருப்பூா் நொய்யல் வீதியில் உள்ள மாநகராட்சி உயா்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு யோகாசனப் பயிற்சிகள் நடத்தப்பட்டன
  • மனநிலையை ஒருநிலைப்படுத்த யோகா பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.

திருப்பூர்:

சா்வதேச யோகா தின விழா இன்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு திருப்பூா் நொய்யல் வீதியில் உள்ள மாநகராட்சி உயா்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு யோகாசனப் பயிற்சிகள் நடத்தப்பட்டன.இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை சாந்தாமணி தலைமையும், உதவி தலைமை ஆசிரியா் பாரூக் அப்ஸா் முன்னிலையும் வகித்தனா்.இதில் பங்கேற்ற மாணவா்களுக்கு பகுதிநேர உடற்கல்வி ஆசிரியா் ராமகிருஷ்ணன் சக்கராசனம், பத்மாசனம் மற்றும் சூரிய நமஸ்காரம் போன்ற யோக நிலைகளை கற்றுக்கொடுத்தாா்.

மேலும் நாள்தோறும் அதிகாலையில் எழுந்து பாடங்களைப் படிப்பதற்கு முன்பாக மனநிலையை ஒருநிலைப்படுத்த யோகா பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினாா். 

Tags:    

Similar News