உள்ளூர் செய்திகள்

சிறப்பு பூஜை நடைபெற்ற காட்சி. சலங்கை ஆட்டம் நடைபெற்ற காட்சி.

அல்லாளபுரம் உலகேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவில் யாகசாலை பூஜைகள்

Published On 2022-09-07 06:08 GMT   |   Update On 2022-09-07 06:08 GMT
  • யாகம் வளர்க்கும் சிவாச்சாரியார்களுக்கு, காப்புக் கட்டுதல் நடைபெற்றது.
  • நவக்கிரக ஹோமம், மகா கணபதி ஹோமம், முதல்கால யாகபூஜை உள்ளிட்டவை நடைபெற்றது.

பல்லடம் :

பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி,அல்லாளபுரத்தில் உண்ணாமுலையம்மன் உடனமர் உலகேஸ்வரர் கோவில் மற்றும் கரிய காளியம்மன் கோவில் உள்ளது. இந்த நிலையில், நாளை கும்பாபிஷேகவிழா நடைபெற உள்ளது. இதனையொட்டி நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகள் துவங்கின.

யாக சாலை மண்டபத்தில் தானியங்கள் கொட்டப்பட்டும், கலசங்கள் தயார் செய்யப்பட்டும், யாகசாலை அலங்கரிக்கப்பட்டது. யாகம் வளர்க்கும் சிவாச்சாரியார்களுக்கு, காப்புக் கட்டுதல் நடைபெற்றது.தொடர்ந்து கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகா கணபதி ஹோமம், முதல்கால யாக பூஜை உள்ளிட்டவை நடைபெற்றது. தொடர்ந்து நடராஜ பெருமான், சிவகாமி அம்மையாருடன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.இதனை தொடர்ந்து நேற்று 2-ம் கால யாகபூஜை, கும்ப அலங்காரம், யாத்ரா தானம், 3ம் கால யாகபூஜை, மூல மந்திர ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கொங்கு நாட்டின் பாரம்பரியக் கலையான பெருஞ்சலங்கை ஆட்டம் நடைபெற்றது. இதனை கொங்கு பண்பாட்டு மையத்தினர் நடத்தினர்.

இதைத்தொடர்ந்து மங்கை வள்ளிகும்மி குழுவினரின், கும்மி ஆட்டம் நடைபெற்றது. இதனை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். முன்னதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ., உலகேஸ்வரர் கோவிலுக்கு வருகை புரிந்தார். அவருக்கு கோவில் விழாகமிட்டி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News